Posts

Showing posts from June, 2020

பண்டைத் தமிழக வரலாறு: வணிகம் - நகரங்கள் - பண்பாடு by அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி

Image
     சங்க காலத் தமிழர் வாணிகம்’ என்னும் இந்தப் புத்தகம் கடைச் சங்க காலத்தில் (அதாவது கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையில்) தமிழர் நடத்திய வாணிகத்தைப் பற்றிக் கூறுகிறது.      அந்தக் காலத்துப் பழந்தமிழர், பாரத தேசத்தின் வடக்கே கங்கைக்கரை (பாடலிபுரம்) முதலாகக் கிழக்குக் கரை மேற்குக் கரை நாடுகளில் நடத்திய வாணிகத்தைப் பற்றியும் தமிழகத்துக்கப்பால் கிழக்கே இலங்கை, சாவகநாடு (கிழக்கிந்தியத் தீவுகள்), மலேயா, பர்மா முதலான கடல் கடந்த நாடுகளோடு செய்த வாணிகத்தைப் பற்றியும், மேற்கே அரபு நாடு, அலக்சாந்திரியம் (எகிப்து) உரோம் சாம்ராச்சியம் (யவன தேசம்) ஆகிய நாடுகளுடனும் செய்த வாணிகத்தைப் பற்றியும் கூறுகிறது.      அந்தப் பழங்காலத்து வாணிகச் செய்திகளைச் சங்க காலத்து நூல்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது. மற்றும் தாலமி, பிளைனி முதலான யவன ஆசிரியர் எழுதின குறிப்புகளிலிருந்தும் ‘செங்கடல் வாணிகம்’ என்னும் நூலிலிருந்தும், புதைபொருள் ஆய்வுகளிலிருந்து கிடைத்த செய்திகளிலிருந்தும் கிடைக்கும் சான்றுகளைக் கொண்டும் எழுதப்பட்டது.    ...

எங்களூர் வரலாறு - #அறிவோம்வரலாறு

Image
     இந்த ஊர். சிற்றூரில்லை. அந்த பகுதியில் உள்ள முக்கியமான டவுன். பசும்பொன் மாவட்டத்துலருந்து, பின்ன ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மாறி, இப்போ சிவகங்கை மாவட்டத்துல இருக்கு. இந்த ஊருக்கு நெருக்கமான பெருநகரம் 'சிட்னி'.      இவ்வூரின் முதல் வரலாறு கி.மு 3ஆம் நூற்றாண்டில் பதியப்படுகிறது. அதாவது, சமணமும் புத்தமும் தமிழகத்தில் வெகுவாக பரவியிருந்த காலம். இதற்கு ஆதாரமாக கூறப்படுபவை.           1. சிவன் கோயில் வெளியில் அமர்ந்திருக்கும் அம்மணசாமி சிலை. அதாவது, மகாவீரர் சிலை. இன்றும்.           2. தேரர் என்ற பதத்தோடு அழைக்கப்படும் நீர்நிலையின் பெயர். புத்தபிட்சுகளை தேரர் என்றழைக்கப்படும். அவர்கள் அங்கு வாழ்ந்ததின் காரணமாக அவ்வாறு அழைக்கப்படுகிறது.      சந்திர குப்த மௌரியர், வைசாக முனிவரை சமணத்தை பரப்ப, சோழ பாண்டிய நாடுகளுக்கு அனுப்பிய அதே காலத்தில்தான், இவ்வூரிலும் சமணம் குடியேறியிருக்கக்கூடுமென்று நம்பப்படுகிறது.           அதேபோல், அசோகர் தன் சகோ...