Posts

Showing posts from April, 2020

பெண் ❤️

Image
பெண். பெரும் அன்பும், பெரும் ஆற்றலும் கொண்டவள். தேவையேற்படுமின் பெருஞ்சீற்றமும். (நல்லது) ஆவதும் பெண்ணாலே; (தீயது) அழிவதும் பெண்ணாலே. அண்ட் வைஸ் வெர்சா. பெண் – ஏமாறுகிறாள், ஏமாற்றப்படுகிறாள். பெண் ஏமாறும் காரணிகள் இரண்டு – அன்பு, அழகு. இதை ஆண்களின் நா அறிந்துள்ளது. பெண்ணின் விடுதலை பெண்ணின் கையில். அதற்கு மிகப்பெரும் எதிரியும் பெண்தான். பெண் – தேவதை என போற்றப்படுகிறாள். அல்லது தே*** என்று தூற்றப்படுகிறாள். ஒருபோதும் அவளும் சகமனுசி என்று ஏற்றுக்கொள்ளப்படுவதேயில்லை. அவள் உணர்ச்சிகள், உணர்வுகள் மதிக்கப்படுவதேயில்லை. பெண் – புனிதம் கற்பிக்கப்பட்டே புதைக்கப்பட்டவள். பெண் மெய்யாகவே புரியாத புதிரா? இல்லை, அவ்வாறு மாயை உருவாக்கப்பட்டதா? புரிந்துக்கொள்ள முயற்சி செய்யப்படவே இல்லையா? Taken for granted? இதுவும் பெண்ணைப்பற்றிய ஒரு ஆணின் புரிதல்தான். சரியாக இருக்க வாய்ப்பில்லைதான். பெண்.

AC-ஆ? உடல்நலமா? சுற்றுசூழலா?

Image
     என்னோட புரிதல் என்னனா. Air-Conditioner (AC) பயன்படுத்தறத நிறுத்திட்டோம்னாலே, இந்த பூமி முக்கால்வாசி குளிராய்டும்.      AC வாங்க வசதியுள்ளவன்/ இல்லாதவன் எல்லோரும் மகிழ்ச்சியா இருக்கலாம். Air-Conditioner (AC) பயன்படுத்துவதால் முதலில் பாதிப்பது நம் உடல்நலம் தான். Pic Courtesy: motherjones.com Read: 1.  https://m.timesofindia.com/life-style/health-fitness/health-news/AC-causes-more-harm-than-good/amp_articleshow/7133000.cms 2.  https://www.curejoy.com/content/disadvantages-of-air-conditioner      அடுத்து நம் சுற்றுசூழல். முதலில் சொன்னதுபோல் AC பயன்படுத்துவது புவி வெப்பமயமாதலை அதிகப்படுத்தும், புவி வெப்பமயமாதலின் விளைவுகள் பற்றி உங்களுக்கே நல்லா தெரியும். AC-யை விட மின் காற்றடியே உடலுக்கும், சுற்றுசூழலுக்கும் மிகவும் நல்லது.      பருவமழை மாறிப்போச்சு, வருடாவருடம் சம்மர்’ல வெயில் கொடூரம் தாங்கமுடிலன்னு பொலம்புறோம். ஆனா அதற்கு முக்கிய காரணிகள பயன்படுத்தறத குறைக்கமாற்றோம். AC பயன்படுத்தறது ஆடம்பரம் & அ...

குறிஞ்சிப்பாட்டு - கபிலர் | Kurincippattu - A Sanga Tamil Masterpiece on Love & Romance of Ancient Tamils #WorldBookDay

Image
கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டு | Kurincippattu by Pulavar Kapilar      குறிஞ்சிப்பாட்டு பத்துப்பாட்டு எனும் சங்கத்தமிழ் நூல் தொகுப்பில் ஒன்றாகும். சங்ககாலத்து தமிழ்ப்புலவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவரான கபிலர் பாடியது.      261 அடிகளைக்கொண்ட இப்பாடல் குறிஞ்சித்திணைப் பண்பாட்டை, குறிஞ்சி நில பூக்கள், தாவரங்கள், விலங்குகள் மற்றும் மக்களின் வாழ்வு நெறிமுறைகளை, வாழ்க்கை குறிப்புகளை, காதல் ஒழுக்கங்களை நன்கு விளக்குகிறது. இதற்குப் பெருங்குறிஞ்சி என்றொரு பெயரும் உண்டு.      ஆரிய அரசன் பிரகத்தன் தமிழரின் களவுநெறியைத் (திருமணத்திற்கு முன்னான காதல் மற்றும் கலவி) தீது என்றான். இது கற்புநெறியில் (திருமணத்தில்) முடியும், மிகவும் நல்லது, என்னும் உண்மைகளைத் தெளிவுபடுத்த பாடப்பட்டது.       தமிழர்தம் காதல் ஒழுக்கத்தை அறிந்துகொள்ள, குறிஞ்சித் திணை ஒழுக்கமாகிய புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறித்து இந்நூல் விளக்கியுரைக்கிறது. இதன் இறுதியில் இரண்டு வெண்பாக்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இவை இந்தப் பாடலின் தொகுப்புச் செய்திகளைக் கூற...

நான் பார்த்த பேய்கள் | My Encounter with Ghosts - 2

Image
மாயா வந்த நேரம்.      அன்று மழைத்தூரி ஓய்ந்த இரவு. சற்றும் சலனமில்லாத இரவு. நண்பனின் மொட்டைமாடி அறையில் இரவு ச்டேயிங். இரவு 10 மணிபோல இருக்கும். இரவு சாப்பாடு முடிச்சிட்டு, ஒரு நல்ல படம் பாக்கலாம்னு டாரெண்ட்ச்ல போயி ‘மாயா’ டவுன்லோடுனோம்.      மாயா, முதல் டைட்டில் சீனே கொஞ்சம் பயமாத்தான் இருந்தது. என் நண்பன் எதற்கும் துணிஞ்சவன், பேய்க்கிலாம் பயப்படற ஆள் கிடையாது. எனக்குதான் பேய்னா கொஞ்சம் பயம். இரவுல பேய்ப்படம் பாக்கும்போது சொல்லவே வேணாம்.      படம் நல்லா, த்ரில்லா போயிட்டிருந்தது. நயன்தாராவோட நடிப்ப ரசிச்சிகிட்டே நானும் பாத்திட்டு இருந்தேன். டைரக்டர மீட் பண்ணி mock acting பண்ற சீன், குழந்தை அழும்போது வர்ற BGM எல்லாம் வேற லெவல்ல இருந்தது. Pic Courtesy: Google      அந்த ப்ரொடியூசர் படம் பாத்திட்டிருக்கும்போது, மாயா வந்து அவர இழுத்திட்டுபோய் கொலைபண்ற சீன் போய்ட்டிருக்கு. அந்த நேரம் பாத்து என் நண்பன், “மச்சி யூரின் வருதுடா, போயிட்டு வந்துறேன்”-னான்.      டாய்லெட் அந்த அறையில கிடையாது. அறையவிட்டு வெளில வந்...

நான் பார்த்த பேய்கள் | My Encounter with Ghosts – 1

Image
கான்ஜுரிங் பேயை காணும் படலம்.      ஞாயிறு காலை, ஞாயிறு உதயமாகும் நேரம். சனி இரவு நண்பர்கள் வீட்டில் ஸ்டே. சனி இரவை சரக்கில் கழித்த நண்பர்கள் தூங்க, நான் விடியும்முன் எழுந்துட்டேன். ஒரே கொசுக்கடி & போர்.       பக்கத்துக்கு ரூம்க்கு போய் ஏதாவது படம் பாக்கலாம்னு லேப்டாப்பை எடுத்தேன். கான்ஜுரிங் வந்து பிரபலமாய் ஓடிக்கொண்டிருந்த நேரமது. சரி அப்படி என்னதான் அந்த படத்துல இருக்குன்னு பாப்போம்னு அந்த படத்தை லேப்டாப்-ல போட்டேன்.      நல்லா போய்ட்டிருந்தது, அம்மா பேய், மரம், கயிறு எல்லாம் ஒரு வகை கிலியை ஏற்படுத்தியது. தனிமையிலும் திகிலோடும் பாத்தும் முடிச்சாச்சு. கொஞ்ச நேரம் அந்த பீலிங் இருந்துச்சு, அப்பறம் இயல்பு நிலைக்கு திரும்பியாச்சு. நாட்கள் ஓடியது. திங்கள், செவ்வாய், புதன்.      பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காதும்பாங்க. எனக்கு நல்லா கிடைச்சிச்சு ஒரு அனுபவம். ஆங்கிலத்துல சொல்லனும்னா “Heart is in the Mouth” -ம்பாங்க, அப்படியொரு அனுபவம்.       மாலை இரவை நோக்கி நகர, நான் அலுவலகத்திலிருந்து வீடு திரு...

இரவு தூக்கத்திற்கானது.

Image
    முன்தூங்கி முன்னெழுவதே உடலுக்கும், மனதிற்கும் மிக நல்லது.  ஆனா, இப்போ காலம் போகப்போக இது அப்படியே மாறிட்டு வருது.  லேட்டா தூங்கி, லேட்டா எழுறது இன்னைக்கு ரொம்ப காமனா பரவிட்டு வருது. எந்தளவுக்குனா, சின்ன வயசுலயிருந்து சீக்கிரமே தூங்கி சீக்கிரமே எழுந்து பழக்கபட்டவங்க கூட,இன்னைக்கு லேட்டா தூங்குறாங்க.      இரவு தூக்கம் எவ்ளோ முக்கியம்னு சொல்லித்தெரிய வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.  சரியா தூங்கலனா மனிதனோட மனம், உடல் ரெண்டுமே ஹெவியா டேமேஜ் ஆய்டும்.  Stress, Depression, Bipolar Disorder  போன்ற உளவியல் நோய்களும் சாத்தியம்.       நீயா நானா ’ல நைட் ஷிஃப்ட் job பத்தின விவாதத்துல கூட ஒரு டாக்டர் சொன்னாரு நைட் கண் முழிச்சா எவ்ளோ பாதிப்புகளை உண்டாக்கும். காலைல தூங்கி காம்பென்செட் பண்ண முடியுமா?       No , மெலடோனியன் ஹார்மோன் சுரக்குறதுக்கு முக்கியமான நேரம் இரவுதான். இரவின் இருள்ல தான் அது சுரக்கும்னுலாம்.      இவர் சொல்ற biological clock, circadian rhythm, sleep cycle சார்ந்த ஆய்வுக...

நடுநிலை - ஒரு நடுநிலையான பார்வை?

Image
Pic Courtesy: Google      நடுநிலை  - இன்று பெரும்பாலும், பெருவாரியான மக்கள் நடுநிலைனா எந்த சார்பும் எடுக்காம, யாருக்கும் சப்போர்ட் பண்ணாம தேமேன்னு இருக்குறததான் நடுநிலை-ன்னு நம்பிட்டுயிருக்காங்க.       இன்னும் சிலர் எல்லோரையும் விமர்ச்சித்து, எல்லோர்மேலயும் கல்லப்போட்டு தங்களின் நடுநிலையை அப்பப்போ நிரூபணம் வேற பண்ணிக்கிறாங்க. அப்படி இருக்குறததான் safezone-ன்னு நெனச்சிக்கிறாங்க, அதுவே தனக்கு நல்லபெயர் எடுத்துக்கொடுக்கும்னு நம்புறாங்க.      உண்மையில் அவ்வாறு எண்ணுவது சரிதானா? நடுநிலை ஒருவனுக்கு நல்லவன் என்கிற பிம்பத்தை தருமா? -ன்னு கேட்டா உண்மையில் இல்லன்னுதான் சொல்வேன். இன்னும் சொல்லப்போனால்,  நடுநிலை என்பது      – சோம்பேறித்தனம்      – துணிவில்லாத்தன்மை      – பொறுப்பற்றத்தன்மை      – அயோக்கியத்தனம் ஏன் சோம்பேறித்தனம்?      சரி எது, தவறு எது-ன்னு ஆராய்றது கிடையாது. ஏன் துணிவில்லாத்தன்மை?      ஒரு கொள்கையையோ/கருத்தையோ நாம சார...

Index

Image
Welcome to my blog..! 🙂 உளவியல் சுரண்டல் – Psychological Exploitation நடுநிலை – ஒரு நடுநிலையான பார்வை? இரவு தூக்கத்திற்கானது. நான் பார்த்த பேய்கள் | My Encounter with Ghosts - 1 நான் பார்த்த பேய்கள் | My Encounter with Ghosts - 2 AC-ஆ? உடல்நலமா? சூற்றுசூழலா? பெண். பராசக்தி - இன்றும் உயிர்ப்போடு இருக்கும் அந்த சொற்கள்   அவன் ஒரு சாமுராய் எங்களூர் வரலாறு - #அறிவோம்வரலாறு #ArignarAnnaSeries #E01 - LAUNCHING THE OFFENSIVE #ArignarAnnaSeries #E02 - Call My State 'Tamil Nadu' இன்னும் ஏன் இந்த தாமதம்? தமிழ் ஹைக்கூ கவிதைகள் | Haiku Poems in Tamil Books Read in 2020

உளவியல் சுரண்டல் - Psychological Exploitation in Politics, Advertising and Marketing

Image
     ஒரு செய்திய நாம நல்லா விளங்கிக்கனும்; இன்னைக்கு முழு உலகளவுலயும் எல்லா துறைச்சார்ந்த ஆய்வுகள் நடக்குது. இந்த ஆய்வுகள் ஒரு காலத்துல தனி நபர்கள் செய்தார்கள் say scientists, ஆனா இப்போ பெரும்பாலும் கார்ப்பரேட் கம்பெனிகள் தான் நடத்துறாங்க.      அந்த ஆய்வுகள அடிப்படையா வச்சு, அவங்க பொருட்கள் தயாரித்து, உலகம் முழுக்க விற்பனை செய்றாங்க. இந்த விற்பனை செய்றாங்க இல்லையா.. இதற்கும் ஆய்வு செய்வாங்க.. எப்படி விற்பனை செய்றதுன்னு. அந்த ஆய்வுகளின் முடிவு படி மார்க்கெட்டிங் பண்ணுவாங்க, இதுதான் முக்கிய பகுதி.      மார்கெட்டிங்ல முதல் அந்த பொருளுக்கு target consumers யாருன்னு ஆய்வு நடக்கும். அப்பறம் அந்த consumers ஓட விருப்பு, வெறுப்பு, insecurities, complex பத்தி ஆய்வு நடக்கும். அத அடிப்படையா வச்சு அந்த பொருட்கள விற்பனை செய்வாங்க. எ. கா – Fair and Lovely, Colgate etc.,      Fair and lovely பத்தி தெரியாதவங்க நம்மில் இருப்பது அபூர்வம்தான். இந்த பொருளின் target consumers dark complexion கொண்ட, தாழ்வு மனப்பான்மை கொண்டவங்க. அப்படியே ...