தமிழ் ஹைக்கூ கவிதைகள் | Haiku Poems in Tamil
தனிமனித தனிமை எண்ணங்களையும், அனுபவங்களையும், உணர்வுகளையும், மெய்சிலிர்க்கும் வாழ்வின் சிறு சிறு கணங்களையும் எழுத்துக்களால் சித்தரிக்கும் சப்பானிய கலையே - ஹைக்கூ!
![]() |
| Courtesy: Google |
1. இதை உடனே படி - உனக்கும் ஹைக்கூ வரலாம். ---
2. அறிவுத்தளத்தில் இயங்க ஆசைப்படும் மூடன். ---3. வைகறை அமைதி தூரத்தில் அழும் பூனையின் குரல். ---4. காதல் பெண்
கானல். ---
5. மலை உச்சியில் மழை கடுங்குளிர் - ஒற்றைக் குடிலில் அழும் குழந்தை. ---6. பழையது இடிக்கப்பட்டு புது வீடு கட்டப்படுகிறது - பூனை குடும்பம் குடியேற. ---7. பற்றி எரிகிறது பழைய நூல்கள் பனிக்கால குளிர். ---8. பம்ப் அடிக்கும் சிறுவன் அதிகாலை வெயில் - காற்றில் திறந்த புத்தகம்.
1. இதை
உடனே படி - உனக்கும்
ஹைக்கூ வரலாம்.

Comments
Post a Comment